எமில் சேரின் கணிப்பீட்டுப் பக்கம்

பணிச் செயன்முறை (OS)

  • கணனி ஒன்றுக்கு உயிர் கொடுப்பது போன்ற வேலையைச் செய்வது பணிச் செயன் முறை மென்பொருளாகும்.
  • இது பொதுவாக OS என அழைக்கப்படும்.
  • பல நிறுவனங்கள் PC வகைக்குரிய OS களை உருவாக்கியுள்ளன.
  • OS ஆனது கணனியின் வன்பொருட் பகுதிகளை இணைத்து அவற்றை ஒரு ஒழங்குமுறைக்கேற்ப செயற்பட வைக்கின்றது.
  • OS இல்லாவிடின் கணனியால் பயன்இல்லை.
  • கணனியில் OS முதலில் நிறுவப்பட வேண்டும்.
  • கணனியின் வன்பொருளையும், மென்பொருளையும் முகாமை செய்து பயனர்களுக்கு வேலை செய்வதற்கேற்ற இடைமுகத்தை வழங்குதல் OS இன் செயற்பாடாகும்.
  • பல்வேறு OS கள் பாவனையில் உள்ளன :-
  1. Windows
  2. Mic
  3. Linux
  4. Ubuntu
  • OS இன் செயற்பாட்டை விபரிப்பதற்குரிய வரிப்படம்

  








  •  இவ் வரிப்படத்தின் அடிப்படையில் வன்பொருளுக்கு ஆதாரம் OS ஆகும் என்பது தெரிகின்றது.
  • OS மூலம் நிறைவேற்றப்படும் செயற்பாடுகளை 4 வகைக்குள் அடக்கலாம்.
  1. நினைவக முகாமை
  2. முறைவழி முகாமை
  3. துணைக்கருவி முகாமை
  4. கோப்பு முகாமை
நினைவக முகாமை
  • கணனியின் நிணைவகத்தை முகாமை செய்வது, OS ஒரு பணியாகும்.
  • ஒரே தடவையில் பல பணிகள் செயற்படும் போது அவற்றிக்கிடையில் மோதல் ஏற்படாதவாறு அதை நிர்வகிப்பது OS ஆகும்.
  • குறித்த பணி முடிவடைந்ததும் நினைத்தில் அப்பணிக்காக ஒதுக்கிய இடத்தை விடுவித்து அடுத்த பணிக்கு நினைவகத்தை OS தயார் செய்யும்.
  • அதிக பயனுனர்கள் கணனியைப் பயன்படுத்தும் போது அச்சந்தர்ப்பத்தில் நினைவகத்தை அனைவருக்கும் ஏற்றவாறு முகாமை செய்வது OS ஆகும்.
முறைவழி முகாமை

  • முறைவழி என்பது Processing ஆகும்.
  • உள்ளீடு செய்யப்படும் தரவுகளை தகவல்களாக மாற்றுதல் முறைவழி முகாமை என்பதனுள் அடங்கும்.
  • உள்ளீட்டுக் காலத்திற்கேற்ப Processing நேரத்தை முகைமைசெய்வது முறைவழி முகாமை ஆகும்.
துணையுறுப்பு முகாமை
  • கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள துணையுறுப்புக்களை நிர்வகித்து அவற்றை உரியவாறு செயற்பட வைப்பது துணையுறுப்பு முகாமையாகும்.
  • துணையுறுப்புக்கள் செயற்படும் கதி, தகவல்களின் அளவு, அவற்றின் நோக்கம், தகவல்கள் பாயும் திசை, போன்ற விடயங்கள் துணையுறுப்பு முகைமை என்பதனுள் அடங்கும்.
 கோப்பு முகாமை
  •  கோப்பு முகாமை என்பது File களை முகாமை செய்வதைக் குறிக்கும்.
  • File களை உருவாக்குதல் Edit செய்தல் அழித்தல் அசைத்தல் நகல் எடுத்தல் போன்ற பணிகளை கோப்பு முகாமை எனும் செயற்பாட்டின் மூலம் OS நிறைவேற்றுகின்றது.
  • கோப்பு முகாமை நன்றாக அமையாவிடின் கணனியின் பயன் சரிவரக் கிடைப்பதில்லை எனவே OS அக்குறையை இல்லாமல் செய்யும் பொருட்டுச் செயற்படுகின்றது.
OS இன் அனுகூலங்கள்
  1. பயன்படுனர்களுக்குரிய  இடைமுகத்தை வழங்குகின்றது.
  2. வன்பொருளையும் மென்பொருளையும் இணைத்து ஒழுங்குபடுத்தி செயற்படவைக்கின்றது.
  3. Coding தொடர்பான அறிவு இல்லாமலே கணனியைப் பயன்படுத்த உதவுகின்றது.